Posts

அக்கப்போர்

பத்திரிக்கை உலகில் 'அக்கப்போர்'  வாராந்தரி ஆரம்பத்தில் பத்தோடு பதினொன்றாக  இருந்தது. அதாவது உயிர் மட்டும் தான் இருந்தது  'தடாலடி' என்கிற புது எழுத்தாளர், வாசகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு எழும்படி எழுத ஆரம்பிக்கும் வரை.   வித்தியாசமாக ஈர்க்கும் விதமாக எல்லோரும் சிலாகிக்கும் ஏதோ ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதை அலசி ஆராய்ந்து கடைசியில் அது ஒரு அபத்தம் என்று (கு)தர்க்க வாதங்களினால் ஸ்தாபிக்க வேண்டியது. ஆனால் அவர் தரப்பு வாதத்தை சுலபமாக மறுக்க முடியாதபடி எழுதுவதுதான் அவரது சாமர்த்தியம் . எல்லா இடத்திலும் எப்போதும் பொதுஜன கருத்தை துவேஷிக்கும்  கோஷ்டி ஒன்று சமூகத்தின் அங்கமாக இருக்கும் அல்லவா !  அத்தகைய  கோஷ்டியின் ஆதரவு தான் எப்பொழுதும் அவர் எழுத்தை அணையாத அக்னியாக காத்துக்கொண்டு இருந்தது! இந்த விசேஷ எழுத்து வாசனை ஒவ்வொரு வாரமும் மற்ற வாசகர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்க ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும்.  எதிர்ப்போர் இல்லாமல், எதிர் போர் இல்லை. இப்படி  ராஜபாட்டையில் சுகமாக பயணித்துக் கொண்டிருந்த தடாலடியின் எழுத்துக்களுக்கு ‌, இரண்...

உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா", என்று இறைஞ்சுகிற குரலில் சமர்ப்பிக்கப்படும் வேண்டுகோள்களில் முக்காலே மூணு வீசம், ஆட்சேபணைக்குரிய ஒன்றாகவே தான் இருக்கும் என்பதில் எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது. குறிப்பாக சென்னையிலிருந்து வந்த எங்கள் ஒன்றுவிட்ட அத்தை ஒருவரின் புகுந்த வீட்டு  மாப்பிள்ளை,, மாயவரத்தில் நடந்த என் தங்கை கல்யாணத்தில் அதட்டலும் அலட்டலுமாக , இந்தக் குறிப்பிட்ட சொற்றொடரை அவ்வப்பொழுது பயன்படுத்தி தனக்கு வேண்டியது, வேண்டாதது எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார் எங்கள் செலவில். அந்த வார்த்தைகள் அவரைப் பொருத்தமட்டில் "ஜீ ..பூ..ம்பா" மாதிரி வேலை செய்தது என்றால் வாஸ்தவத்தில் அது குறைவே! எங்கள் ஒன்றுவிட்ட அத்தை ஒருவரின் புகுந்த வீட்டு மாப்பிள்ளை வருகிறார் என்று என் அப்பாவிடம் "நம்மாத்து(?) மாப்பிள்ளை வரார். கொஞ்சம் பாத்து கவனிச்சுக்கோ!" என காதில் போட்டு வைக்க, "டேய் சுதர், நாளைக்கு நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் வராராம். பாத்து, அந்த முசுட, முருங்க மரத்துல ஏறாம பாத்துக்கோ!" என்று என் அப்பா அதை அர்த்தம் பிறழாமல் மொழிபெயர்த்தார்!  இப்படி யாருடைய ...

அம்மாவின் இடம்

       இதுநாள்வரை பெங்களூரில் இருந்த கிருஷ்ணனுக்கு அடுத்த மாதத்திலிருந்து அமெரிக்கா வாசம் பிராப்தி. பிள்ளை, பெண் மனைவியோடு சியாட்டிலுக்கு. ஆகவே அம்மா ஸ்ரீரங்கத்திற்கு. பேரன், பேத்தி, பாட்டியை கட்டிக் கொண்டு அழ, கிருஷ்ணன் மனைவியின் கண்களில் துளிர்த்த கண்ணீர் இது போதும்தானே என்று கேட்டு நின்றது. குழந்தைகள் கொஞ்சம் வளரும்வரை காத்திருந்தான் போலிருக்கிறது. இப்பொழுது வெளிநாட்டிற்கு கம்பெனியில் அனுப்புகிறார்கள் என்று புளுகிவிட்டு (அதுவும், ஏதோ புது கம்பெனியில் சேர்வதற்கு) கிளம்புகிறான். நாளைக்கு மறு நாள் அப்பாவின் ஏழாவது ஸ்ரார்த்தத்திற்கு கூட இருக்கப் போவதில்லையாம்.          அப்பா மறைந்த உடனேயே என்னைக் கேட்காமலேயே வலுக்கட்டாயமாக அம்மாவை அழைத்துக் கொண்டு போனபோது அவன் பாசத்தை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. பின்னர் சந்தேகமாக மாறி வலுப்பெற்று இப்போது அமெரிக்காவில் கரை கடக்கிறது. இந்த விஷயத்தில் தனது ஓரகத்தியைப் பற்றி எனது மனைவி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள். சில சமயங்களில் இரண்டு குடும்ப அங்கத்தினர்களும் இது சம்பந்தமாக பேசும்பொழுது, அவள் தன் எதி...